காலம் மாறலாம் காமம் மாறலாம் காதலும் மாறுமோ? மாற்றத்தை ஏற்காத நெஞ்சம் தாம் மாறியதை அறிய மறந்ததேன்? மாற்றங்கள் இவ்வுலகில் நிரந்தரம் ஆனால்... எக்காலத்திலும் நம் சொந்தம் மாறுவதில்லை அந்த பயமும் எமக்கு இல்லை இடையில் வெறும் ஊடலே நம் காதல் மாறுவதில்லை !!!
காதலனை, கனவு மங்கைக்காக விட்டுச் சென்றாளோ? கண்ணாளனை, கண்மணிக்காக விட்டுச் சென்றாளோ? தன் அவனை, தோழிகளுக்காக விட்டுச் சென்றாளோ? என்னவனை, எனக்காக விட்டுச் சென்றாளோ? அவளுக்காக விட்டு செல்கிறேன் என் உயிரில் ஒரு பாதி அவளின் தேவதையான அவன் பிள்ளை !... - தன் கணவனின் காதலிக்கு, மனைவி எழுதுவது ...
Comments
Post a Comment