காலம் மாறி வரும் தருணத்தில் எங்கோ என்னை இழந்தது போன்ற உணர்வை ஒரு நொடியில் மீட்டெடுதேன் உன் கண்கள் பேசிய ஒரு சில வார்த்தைகளில் !. தொலைந்து நானும் போகவில்லை ஓளித்து வைக்கப்பட்டிருந்தேன் உன் கைகளுக்குள் பத்திரமாக !
நிலவிற்கு என் காதல் நிழலோ ? எடுத்து செல்கிறது, மறையும் பொழுது ... மறையும் என் காதல் ஒரு நாள் ஒளி பெறுமோ ? கண்ணா ... காத்திருக்கும் இந்த காதலிக்கு விடை என்னவோ?
இன்றும் முதல் நாள் போலவே ... ஆச்சர்யங்கள் குறையாமல் ... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ... நெடுந்தூரம் பயணிக்க இன்னும் நாட்கள் உண்டு ... சேரும் இடம் தெரியவில்லை ... பயணிக்கும் பாதை புரியவில்லை ... நூறு முறை கைகோர்த்தும் சலிக்கவில்லை ... அர்த்தமற்ற பார்வைகள் வீசியும் புரியவில்லை ... படுக்கையில் ஒன்றாய் கிடந்தும் சலனமில்லை ... ஓராயிரம் முறை உன்னை காதலித்தும் திகட்டவில்லை ... உன்மேல் எனக்கு திகட்டாத காதல் !...
Comments
Post a Comment