நான் எழும்போதெல்லாம் உன் முகம் அருகில் இருந்தது சலித்தும் வேறொன்றும் தோன்றியதில்லை இன்று காலை எதோ ஒரு மாற்றம் எட்டு திக்கிலும் வெறும் இருட்டு கனவு கலைந்தது போலும் பல நேரங்கள் கடந்தும் தனிமையே நிதர்சனமென புரிந்தது என்றாவது மறுபடியும் அந்த காலை விடியும் என் அருகில் நீ இருப்பாய் இம்முறை கனவு கலையாமல் பார்த்துக்கொள்கிறேன் பஞ்சுமெத்தையும் குளிர் காற்றும் தூக்கம் தரலாம் நீ அன்றி நான் எங்கு கனா காண்பது?
காதலனை, கனவு மங்கைக்காக விட்டுச் சென்றாளோ? கண்ணாளனை, கண்மணிக்காக விட்டுச் சென்றாளோ? தன் அவனை, தோழிகளுக்காக விட்டுச் சென்றாளோ? என்னவனை, எனக்காக விட்டுச் சென்றாளோ? அவளுக்காக விட்டு செல்கிறேன் என் உயிரில் ஒரு பாதி அவளின் தேவதையான அவன் பிள்ளை !... - தன் கணவனின் காதலிக்கு, மனைவி எழுதுவது ...
நிலவிற்கு என் காதல் நிழலோ ? எடுத்து செல்கிறது, மறையும் பொழுது ... மறையும் என் காதல் ஒரு நாள் ஒளி பெறுமோ ? கண்ணா ... காத்திருக்கும் இந்த காதலிக்கு விடை என்னவோ?
Comments
Post a Comment