காதலின் பிரிவு, காயம் அல்ல ... தனியே தவித்த இரவுகள், நரகமும் அல்ல ... முத்தம் சிந்தாத உதடுகளை, நான் வெறுக்கவும் அல்ல ... உன்னிடம் உணர்ந்த அனைத்தும், பொய்யானதும் அல்ல ... காணக் காத்திருக்கிறேன் !... பிரிவின் வலி தெரியுமுன், உன்னை சேர ... என் இரவுகளை நரகமாக்காமல் காத்துக் கொள்ள ... முத்தம் சிந்தாத உதடுகளில் தேன் சுரக்க ... உன்னிடம் உணரவிருக்கும் மிச்சத்திற்காக ...
காலம் மாறலாம் காமம் மாறலாம் காதலும் மாறுமோ? மாற்றத்தை ஏற்காத நெஞ்சம் தாம் மாறியதை அறிய மறந்ததேன்? மாற்றங்கள் இவ்வுலகில் நிரந்தரம் ஆனால்... எக்காலத்திலும் நம் சொந்தம் மாறுவதில்லை அந்த பயமும் எமக்கு இல்லை இடையில் வெறும் ஊடலே நம் காதல் மாறுவதில்லை !!!
என்னை விட்டு சற்றே தொலைவில் நீ இருந்தாலும் ... பூமியின் மறுப்பக்கத்தில் இருப்பதை போல் ஒரு உணர்வு ! உன் மூச்சுக்காற்று என் காதோடு பேசிக்கொள்ளாத தருணத்தில் ... என்னுள் எத்தனை போராட்டங்கள் ! பல நிமிடங்கள் உன்னிடம் பேசிய பின்னும் ... ஏதோ சொல்லாமல் விட்டதை போல் ஒரு தவிப்பு ! கடந்த காலங்களில் இது நிகழ்ந்ததில்லை ... நடக்கவிருக்கும் காலங்களில் ? இன்னும் என்னென்ன புதிதோ?
Comments
Post a Comment