காலம் மாறலாம் காமம் மாறலாம் காதலும் மாறுமோ? மாற்றத்தை ஏற்காத நெஞ்சம் தாம் மாறியதை அறிய மறந்ததேன்? மாற்றங்கள் இவ்வுலகில் நிரந்தரம் ஆனால்... எக்காலத்திலும் நம் சொந்தம் மாறுவதில்லை அந்த பயமும் எமக்கு இல்லை இடையில் வெறும் ஊடலே நம் காதல் மாறுவதில்லை !!!
காதலின் பிரிவு, காயம் அல்ல ... தனியே தவித்த இரவுகள், நரகமும் அல்ல ... முத்தம் சிந்தாத உதடுகளை, நான் வெறுக்கவும் அல்ல ... உன்னிடம் உணர்ந்த அனைத்தும், பொய்யானதும் அல்ல ... காணக் காத்திருக்கிறேன் !... பிரிவின் வலி தெரியுமுன், உன்னை சேர ... என் இரவுகளை நரகமாக்காமல் காத்துக் கொள்ள ... முத்தம் சிந்தாத உதடுகளில் தேன் சுரக்க ... உன்னிடம் உணரவிருக்கும் மிச்சத்திற்காக ...
Comments
Post a Comment