காலம் மாறி வரும் தருணத்தில் எங்கோ என்னை இழந்தது போன்ற உணர்வை ஒரு நொடியில் மீட்டெடுதேன் உன் கண்கள் பேசிய ஒரு சில வார்த்தைகளில் !. தொலைந்து நானும் போகவில்லை ஓளித்து வைக்கப்பட்டிருந்தேன் உன் கைகளுக்குள் பத்திரமாக !
காதலனை, கனவு மங்கைக்காக விட்டுச் சென்றாளோ? கண்ணாளனை, கண்மணிக்காக விட்டுச் சென்றாளோ? தன் அவனை, தோழிகளுக்காக விட்டுச் சென்றாளோ? என்னவனை, எனக்காக விட்டுச் சென்றாளோ? அவளுக்காக விட்டு செல்கிறேன் என் உயிரில் ஒரு பாதி அவளின் தேவதையான அவன் பிள்ளை !... - தன் கணவனின் காதலிக்கு, மனைவி எழுதுவது ...
Comments
Post a Comment