அவன்: சிட்டுக்குருவியின் பிரிவை எண்ணி பட்டு போன மரங்கள் இல்லை ... காதல் கூடு களைந்து விட்டால் இன்னொரு கூட்டில் இடமா இல்லை? இவள்: பறவைக் கூட்டில் இடம் ஒன்று காட்டி தழுவ மனம் உண்டு ! கவிஞன் சொன்ன சொற்கள் கேட்டு சாய்ந்து இளைப்பாற தோள்கள் உண்டு !
காதல் கேட்டேன் உன் படுக்கையில் கிடந்ததுறங்க ... வாழ்க்கை கேட்டேன் உன் கருவை நான் சுமக்க ... வரம் கேட்டேன் உன் மடியில் என் உயிர் பிரிய ... மரணம் கேட்டேன் இம்மூன்றையும் கொண்டு செல்ல ...
Comments
Post a Comment